அண்ணாமலை 2023 ஏப்ரல் மாதம் 'டிஎம்கே பைல்ஸ்' என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளை அடங்கிய ஆவணங்களை வெளியிட்டார். அதில் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 21 நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், அவை ஊழல் மூலம் சேர்க்கப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் தனது பெயருக்கும் குடும்பத்துக்கும் களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ரூ.100 கோடி இழப்பீடு கோரப்பட்டது. வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். பின்னர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் மூலமாகவும், சில சமயங்களில் அண்ணாமலை நேரடியாகவும் டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி பெற்றனர்.

அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி. ஆர். பாலுவுடன் மூன்று மணி நேரம் குறுக்கு விசாரணை செய்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்த திமுக!! ஆறாத வடு!! பயங்கரவாதிகளுக்கு துணை போவதா? அண்ணாமலை ஆத்திரம்!
ஒரு சாமானியனாக வழக்கறிஞர்கள் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார். 2.50 கோடி ரூபாய் கடன், விவசாய நிலத்தை வாங்கி இருக்கிறேன் என்றும் அது பொதுவெளியில் இருக்கிறது எனவும் தெரிவித்தார். டி.ஆர். பாலு கப்பல் வாங்கி இருப்பதாக கூறிய அவர் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திமுகவிற்கு நிச்சயம் பாடம் புகட்டுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ரஜினி தான் உதாரணம்..! ரசிகர் மன்றம் பிரச்சாரம் செய்யாது... போட்டு தாக்கிய அண்ணாமலை..!