மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக நிர்வாகிகளை வரவேற்று அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; 11 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் வறுமை ஒழிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை,. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவி கொண்டிருக்கும்போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மக்களுடைய பணத்தை கொள்ளை அடித்து சினிமா படத்தை தயாரிக்கும் தம்பிகள் உலவி கொண்டிருக்கும்போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ? என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் திட்டத்தின் மீதெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி எந்த வேலையும் செய்யாமல் நான்கு ஆண்டு காலம் திமுக ஆட்சி காலத்தை கடத்தி இருக்கிறார்கள். அப்போது எப்படி மக்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஒரு மதத்தை சார்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து சர்ச்சைப்படுத்துவதே முழு நேர வேலையாக திமுக பார்த்து வருகிறது. அப்போது எப்படி நிம்மதி இருக்கும்., அதையெல்லாம் தாண்டி நடுத்தர குடும்பத்தில் நிம்மதியாக வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று கேட்டால் அது முடியாது.
இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு.. வரும் காலம் நமதே! ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா..!

கொங்கு பகுதிக்கு வந்தால் முதியோர்களை குறி வைத்துக் கொள்கிறார்கள்., தென்பகுதிக்கு சென்றால் சாதி வன்முறையால் கொலை செய்கிறார்கள்., சென்னையில் கூலிப்படை வைத்து கொள்ளுகின்றனர். எந்த இடத்தில மக்களுக்கு நிம்மதி இல்லை என தெரிவித்தார். திமுக ஆட்சியை விரட்டுவது தான் ஒற்றை இலக்கு என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!