சென்னை உயர் நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது மற்றும் குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், விஜயகுமார், விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியது. மொத்தம் 14 பேருக்கு ஜாமீன் கிடைத்தது.

ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜாமீன் வழங்கப்பட்டது தவறு என்றும், வழக்கின் தீவிரத்தை கீழ் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்கவில்லை என்றும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தும் அபாயம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்ததால் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே. ராஜசேகர், ஜாமீன் பெற்றவர்களில் அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார்.
இதையும் படிங்க: MP அமரகீர்த்தி கொலை வழக்கு.. 12 பேருக்கு தூக்கு தண்டனை..! இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!
ஆனால் அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமின் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் சரணடைய அவகாசம் கோரி அஸ்வத்தாமன் உள்பட 12 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து பின்னர் ஜாமின் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் சரணடைய வரும் 13ம் தேதி வரை அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: சொந்த நாட்டு எரிசக்தி அனுமதி தேவையா? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!