தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறும் காலகட்டத்தில், குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள் சார்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் முக்கியமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்டோர் இதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். "சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை", "குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி", "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன" என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், பொது இடங்கள் என எங்கும் பாதுகாப்பு பறிபோய்விட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். பச்சிளம் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் இந்த விமர்சனங்களை தீவிரப்படுத்துகின்றன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!
இந்த நிலையில் தமிழக பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை யாருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய இயலாத துருப்பிடித்த இரும்புக்கர ராட்சசன் முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: மதிய உணவில் பல்லி..! தரத்தைக் கூட பார்க்க முடியாத போலி சமூகநீதி அரசு... நயினார் கண்டனம்..!!