பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று கூறும்போது, 2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது.

பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மக்கள் உயிர் உங்களுக்கு அவ்ளோ அலட்சியமா? நீங்க பொறுப்பேத்துப்பீங்களா? முதலமைச்சரை லெஃப்ட் & ரைட் வாங்கும் நயினார்..
இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது: “பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும், பின்னணியும் கிடையாது.

இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதைப் பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்சினைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது எனக்கூறினார். தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

கன்னடத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு முதல்வரால் தனக்கு பிரச்சினை வந்தது என்று கமல்ஹாசன் கூறியது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்விகத்தை எடுத்து பார்த்தாலும் பல்வேறு பிரச்சினைகள் வரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவிடம், கன்னடம் வாழ்க என்று கூறச்சொன்னார்கள்.

ஆனால், அந்த நேரத்தில் ஜெயலலிதா, உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து வருந்தத்தக்கது எனக் கூறினார். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, “அதை எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும்,” என்று அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: அத்துமீறும் போலீசார்! சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! முதல்வரை வெளுத்து வாங்கும் நயினார் நாகேந்திரன்..!