பா.ஜ.க. கூட்டத்தில் சிலர் என்னை அம்மா என்றார்கள் . தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா தான் இருக்க முடியும் . அது ஜெயலலிதா அம்மா மட்டும் தான் . என்னை அக்கான்னு கூப்பிட்டால் போதும் என பட்டுக்கோட்டை அருகே இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தமிழிசை சவுந்தரராஜன் பாசமழை பொழிந்தது அதிமுகவினரை உருக வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயத்தில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை குழுவினர் விவசாயிகளிடம் இன்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கோரிக்கையை பெற்றுக் கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளுக்கான கோரிக்கைகள், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இடைக்கால பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. கரும்பு, நெல்லுக்கான ஆதார விலை அறிவிக்கவில்லை. தென்னை விவசாயத்திற்கு மத்திய பட்ஜெட்டில் சிறப்பாக அறிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்திற்கு, 'முட்டை பட்ஜெட் என கூறி போஸ்டர் அடித்தார்கள். அவர்களால், ஜீரோ என போட முடியாது. ஏன் என்றால், தமிழகத்திற்கு 9 திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த முட்டை குஞ்சு பொரித்து, கோழி பெருசாகும், மறுபடியும் முட்டை போடும், மறுபடியும் குஞ்சு பொரிக்கும், பிரதமர் மோடியின் மத்திய பட்ஜெட், பெருகி ஒரு கோழிப் பண்ணையாகவே மாறும்.
விவசாயிகளின் கோரிக்கையை எவ்வளவு நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நிறைவேற்ற முடியும். விவசாயிகள் மீது மிகுந்த மிகுந்த அன்பு கொண்ட கட்சி பா.ஜ.க. கூட்டத்தில் சிலர் என்னை அம்மா என்றார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா தான் இருக்க முடியும். அது ஜெயலலிதா அம்மா மட்டும் தான். என்னை அக்கான்னு கூப்பிட்டால் போதும். ஜெயலிலதாவின் ஆசை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான். ஆகவே அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ள தேர்தல் அறிக்கை குழுவாக வந்துள்ளோம்.
இதையும் படிங்க: உள்ளாட்சி உரிமைகளை பறித்த ஸ்டாலின் சுயாட்சி பற்றி பேசுறாரு..! பொளந்து கட்டிய தமிழிசை ..!!
கனிமொழி தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்கிறார். பா.ஜ., தேர்தல் அறிக்கை அம்மா மாதிரி. ஏன் என்றால், அம்மாக்குத்தான் குழந்தைகளுக்கு என்ன தேவை என தெரியும். எனவே, நமது அறிக்கை 'அன்னை அறிக்கை' யாக இருக்கும். நல்ல தேர்தல் அறிக்கை மக்களுக்கு சமர்ப்பிப்போம் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்காக எதுவுமே இல்லை. விவசாயிகள் எல்லாம் மிகுந்த ஏமாற்றத்தோடு இருக்கிறார்கள். இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மக்களின் விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறும்” என்றார்.
இதையும் படிங்க: தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!