சென்னை மாதவரம் அன்னை சத்யா நகரில் உள்ள வீடு ஒன்றில் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் 10 பேரும் பால்கனி அருகே நின்று கொண்டிருந்த போது இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பால்கனியில் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் கீழே விழுந்த நிலையில் அலறி துடித்ததை எடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: அமித்ஷா தகுதியற்றவர்..! அருவருப்பு.. அப்பட்ட பொய்.. திமுக ராஜா கடும் தாக்கு..!

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகேஸ்வரன், தாபால்ஷா, கோபால், சுஷாந்த் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடத்தின் பால்கனி அடைந்து விழுந்து ஐந்து பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு.. பல வீரர்கள், அதிகாரிகள் காயம்..!