காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இது பொதுவாக ஜூன் 12-ம் தேதி தொடங்கி, ஜனவரி 28-ம் தேதி வரை தொடர்கிறது. இருப்பினும் தண்ணீர் திறப்பு அணையின் நீர் இருப்பு மற்றும் பருவமழையைப் பொறுத்து மாறுபடலாம். சில ஆண்டுகளில் ஜூன் 12-க்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ திறக்கப்படுகிறது.

இதன்மூலம் குறுவை, சம்பா, மற்றும் தாளடி ஆகிய மூன்று பருவ சாகுபடிகளுக்கு நீர் வழங்கப்படுகிறது. இந்த நீர் திறப்பு தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, மற்றும் புதுச்சேரி இடையே நீண்டகால பிணக்கு உள்ளது. நீர் திறப்பு குறித்து கர்நாடகத்தின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும் இந்த ஆண்டுக்கான பாசனத்திற்காக தண்ணீர் சரியான நேரத்தில் திறக்கப்பட்டது. குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 92வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையும் படிங்க: நின்னா வரி, நடந்தா வரி.. சோத்துக்கு கையேந்த வச்சு வயித்துல அடிக்க பாக்குறீங்களா? விளாசிய சீமான்..!

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாலடி பருவங்களில் நெல் சாகுபடி செய்வதற்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவிரி பாசனத்திற்கு அணைகள் திறக்கப்பட்டு 18 நாட்கள் ஆன நிலையிலும், பாசன ஆறுகளில் தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாக குற்றம்சாட்டினார்.

பாசனா மதகுகள் மற்றும் கதவுணையில் சீரமைக்க வில்லை என்று கூறிய அவர், சட்டமன்றத்தில் பாசன மதகுகளை சீரமைக்க 8 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறியதாகவும், இந்த விவகாரத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டும் பாசன ஆறுகளில் தண்ணீர் செல்ல முடியவில்லை., ஆனால் மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் கடலுக்குச் செல்ல கூடிய சூழல் உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!