• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்பனே முருகா..!! கட்டணமில்லா அறுபடை வீடு பயணம்.. அழைக்கும் அமைச்சர் சேகர்பாபு..!!

    கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    Author By Editor Wed, 06 Aug 2025 15:43:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    can-apply-for-a-free-arupadai-veedu-spiritual-journey-minister-sekar-babus-info

    தமிழகத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களாக விளங்குகின்றன. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகியவை முருகனின் ஆறு புனித திருத்தலங்களாகும். இந்த அறுபடை வீடுகளை தரிசிக்கும் ஆன்மிகப் பயணம், பக்தர்களுக்கு மன அமைதியையும், ஆன்மிக உணர்வையும் வழங்குகிறது.

    arupadaiveedu

    திருப்பரங்குன்றம், மதுரையில் அமைந்துள்ள முதல் படைவீடு, முருகனின் வெற்றியையும், தேவயானையுடனான திருமணத்தையும் குறிக்கிறது. திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்த கோயில், சூரபத்மனை வென்ற தலமாக புகழ்பெற்றது. பழநியில் உள்ள தண்டாயுதபாணி கோயில், பக்தர்களின் பாவங்களைப் போக்கி, ஆரோக்கியம் அருள்கிறது. சுவாமிமலையில் முருகன், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த தலமாக விளங்குகிறது. திருத்தணி, முருகனின் அமைதியான தோற்றத்தையும், வள்ளியுடனான திருமணத்தையும் பறைசாற்றுகிறது. பழமுதிர்சோலை, அழகிய மலைப்பகுதியில் அமைந்து, இயற்கையுடன் இணைந்த ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பாக்., பெண்..! 30 ஆண்டுகளாக தொடரும் பந்தம்! ரக்ஷா பந்தன்..

    இந்த ஆன்மிகப் பயணம் பக்தர்களுக்கு முருகனின் பல்வேறு தோற்றங்களையும், அவரது தெய்வீக சக்திகளையும் உணர வைக்கிறது. ஒவ்வொரு கோயிலும் தனித்துவமான வரலாறு, கட்டிடக்கலை மற்றும் சடங்குகளைக் கொண்டுள்ளது. இந்த யாத்திரை, மனதை ஒருமுகப்படுத்தி, பக்தியை ஆழப்படுத்துவதுடன், தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை அறியவும் உதவுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அறுபடை வீடுகளை தரிசிக்க வருகின்றனர். தைப்பூசம், கந்த சஷ்டி போன்ற பண்டிகைகளில் இத்தலங்கள் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும். இதுவரை 2,022 மூத்த குடிமக்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

    arupadaiveedu

    பயணிகளுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், சீப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பயணப் பை வழங்கப்படுகிறது. மேலும், செயல் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் உதவியாக உடன் செல்கின்றனர். 

    இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: முந்திரி கொட்டைதனமா கேஸ் போட்டா இப்படிதான்! அடிமைகளின் குறுக்கு புத்திக்கு குட்டு…விளாசிய திமுக

    மேலும் படிங்க

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    சினிமா
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    சினிமா

    செய்திகள்

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    இந்தியா
    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share