தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான சி. ஜோசப் விஜய் சந்திரசேகர் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரித் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரங்கள் தற்போது வெளியாகித் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வந்ததாகக் கூறப்படும் விரிசல், தற்போது சட்ட ரீதியானப் போராட்டமாக மாறியுள்ளது.
இந்த மனு 1954-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special Marriage Act) கீழ், தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி 2025, டிசம்பர் 3-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் S.M.O.P. No. of 2026 என எண்ணிடப்பட்டு நிலுவையில் உள்ளது.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததைச் சங்கீதா கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த உறவை முடித்துக் கொள்வதாக உறுதியளித்த போதிலும், அதனைத் தொடர்ந்து வந்ததாகவும், இது தனக்குத் தாங்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் உட்பட தவெக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்! அர்ஜுன் சம்பத் ஆவேச பேட்டி!
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலுமாகப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தியதாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். விவாகரத்து வழங்கக் கோருவதுடன், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது தகுதியான மாற்று இடத்தை செய்து தர வேண்டும்.

பிள்ளைகளின் (ஜேசன் சஞ்சய் - 25, திவ்யா சாஷா - 20) நலன் மற்றும் தனது எதிர்காலத்திற்காக நிலையான ஜீவனாம்சம் மற்றும் வழக்கின் செலவுகளை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
தமிழக அரசியலில் 'தவெக' எனும் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்க்கு, குடும்ப ரீதியான இந்தத் சட்டப் போராட்டம் ஒரு மாபெரும் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை விஜய் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான பதிலும் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!