தங்க நகை கடன்கள் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மதிநதி அமைச்சகம் பரிந்துரை வழங்கி உள்ளது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை எடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நகை கடன் தொடர்பாக மதிய நிதி அமைச்சகம் செய்துள்ள பரிந்துரையை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். RBI-யின் தங்கக் கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் எழுப்பிய கவலைகளுக்கு மதிய நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொதுக்குழுவில் கூடுவோம்! பொதுத் தேர்தலில் வெல்வோம்... கழக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

சிறு கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது, குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை நாடுபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வது தனது நிலையான கோரிக்கை என தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் கொடுக்கப்பட்ட நேர்மறையான பரிசீலனையைப் பாராட்டுகையில், ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகள் மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னரே எட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: உங்க துருப்பிடித்து போன இரும்புக் கரத்தை ரிப்பேர் பண்ணுங்க.. முதல்வர் ஸ்டாலினை நயினார் பங்கம்!