தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச. ஜோசப் விஜய் அவர்கள், தாய்நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஒரு தீர வீரரை நேரில் அழைத்து கௌரவித்த சம்பவம் மக்கள் மனங்களை நெகிழச் செய்துள்ளது. கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தை அவரது குடும்பத்தாருடன் சென்னையில் சந்தித்த முதலமைச்சர், அவரது வீரத்தைப் பாராட்டியதோடு, அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையையும் வழங்கினார்.
மீனாட்சி சுந்தரம் தேனி மாவட்டம் கமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர். 2024 டிசம்பர் 19 அன்று ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, முகத்தில் மற்றும் தோளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் துணிச்சலுடன் முன்னேறி, ஒரு பயங்கரவாதியை நேருக்கு நேர் சந்தித்து அழித்து, தோழர்களின் உயிரைக் காப்பாற்றிய வீரச் செயலுக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 8 அன்று இந்த விருதை வழங்கினார்.

முதலமைச்சர் விஜய் இந்த வீரரை அழைத்த சந்திப்பு வெறும் மரியாதை நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், உணர்ச்சிபூர்வமான தருணங்களால் நிறைந்ததாக இருந்தது. ராணுவ வீரரின் துணிவைப் புகழ்ந்த முதலமைச்சர் விஜய், “தமிழ்நாட்டின் மகன்கள் நாட்டின் எல்லையில் நின்று பாதுகாக்கும் வீரத்தை உலகுக்கு நிரூபித்துள்ளனர்.
இதையும் படிங்க: எங்க போச்சு சிங்கப்பெண் படை.? SHOW காட்டும் அரசியலை நிறுத்துங்க..! இபிஎஸ் காட்டம்.!
இத்தகைய வீரர்களுக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்” என்று தெரிவித்தார். காசோலையை வழங்கிய பின்னர், அவர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை கையில் வாங்கி தன் மடியில் அமர்த்தி அன்புடன் கொஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
இதையும் படிங்க: வக்காலத்து ஏன் வாங்கல.? விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் சரமாரி கேள்வி..! வழக்கு ஒத்திவைப்பு..!