கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சை மலை எஸ்டேட்டின் தென்பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் - மோனிகா என்பவரது மகள் ரோஷினிகுமாரி. 7 வயது சிறுமி ரோஷினி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த சிறுத்தை ஒன்று தாய் மோனிகாவின் கண்முன்னே சிறுமியை கவ்விச் சென்றுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மோனிகா செய்வதறியாது, அருகில் உள்ளவ தகவல் கொடுத்துள்ளார். பிறகு வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சிறுத்தைச் சென்ற வழியில் சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, தாய் கண்முன்னே சிறுத்தையால் கவ்வி செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வெடிகுண்டு இருக்குமோ? கோவை ஏர்போர்ட்டில் தனியாக கிடந்த பையால் பரபரப்பு..!