உழவர் கடன் அட்டை திட்டத்தின் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்ற விவசாய பணிகளுக்காகக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடன் வழங்குவது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஒரே வழிகாட்டுதலை பின்பற்றும் வகையில் மாதிரி வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவுத்துறை தயார் செய்து அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

அதில், சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இதை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இது குறித்து கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறதா மோதல்? டிரம்ப் கருத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு!!

அதில், சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என்றும் இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் தரப்படவில்லை மற்றும் கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயிர் கடன் பெறும் விவசாயி மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்கனவே பயிர் கடன் பெற்றுளாரா என்பதை தெரிந்து கொள்ளவே சிபில் பார்க்கப்படுகிறது.

அப்படி அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்கனவே பயிர் கடன் பெற்றிருந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெறும் பயிர் கடனிற்கு வட்டி மானியம் பெறமுடியாது. இந்த வட்டி மானியம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு இழப்பாகும். இதன் அடிப்படையில் மட்டுமே அந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இவரோட மிகப்பெரிய பக்தர்... ஆளுநர் ரவி சொன்ன ரகசியம்!!