சென்னையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தார். பின்னர் இந்த விழாவிக் உரையாற்றிய அவர்,கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' எனும் குறளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கையின் அடி நாதந்தில் திருவள்ளுவர் இருக்கிறார். சொல்லப்போனால் புதிய கல்விக் கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார். 70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் பாடத்திட்டத்தைதான் பயின்று வந்தோம்.
இதையும் படிங்க: மோடி அரசின் 11 ஆண்டுகால சேவை.. எந்த மாற்றமும் இல்லை.. ராகுல் காந்தி கடும் தாக்கு..!

அது நம் அறிவை பெரிய அளவிற்கு வளர்க்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர். திருவள்ளுவரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறள் உந்துதலாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 11 வருஷத்துல ஒரு முறையாவது இது நடந்திருக்கா..? பிரதமர் மோடியை விளாசிய ஜெய்ராம் ரமேஷ்..!