2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் களத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, விஜய் தலைமையிலான அரசு உருவாவதற்கு முக்கியப் பங்கு வகித்தன. இந்த ஆதரவின் பின்னணியில் முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது, ஆளுநர் மூலம் ஆட்சி திணிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், பெரும்பான்மையை நிரூபிக்கும் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு நிபந்தனை விதித்தார். இதைத்தொடர்ந்து சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றி கழக அரசு ஆதரவு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மோடியை சந்திச்சு பேசுங்க CM..! மேகதாது பணியை தொடங்கிய கர்நாடகா..? டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!
இந்த நிலையில், ஆளுநரிடம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என முதலமைச்சர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மக்கள் அதிகாரத்திற்கு அருகில் ஆளுநர் வந்துவிடக் கூடாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் ஆதரித்தோம் என்று வீரபாண்டியன் குறிப்பிட்டார். மாநில உரிமைகளுக்காக தேவைப்பட்டால் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: TVK அரசுக்கு ஒரு வருஷம் டைம்..! அவங்க புதுசுய்யா..! நிலைப்பாட்டை விளக்கிய அண்ணாமலை..!!