ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சதி ஒரு எம்.எல்.ஏ.வை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல; சுமார் 10 முதல் 15 தவெக எம்.எல்.ஏ.க்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒன்றாக ராஜினாமா செய்ய வைத்து அரசுக்கு பெரும்பான்மை இழக்கச் செய்யும் திட்டம் எனக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசு தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முன்பிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியதாகவும், தேர்தல் பணிகளின் போது ஏற்பட்ட பரிச்சயத்தை இந்த முயற்சிக்கு பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கைரானவர்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், ஆட்சிக் அமைப்பு சதி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கிற்கு போலீஸ் சம்மன் கொடுத்தது. இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் வழங்கப்பட்டது. போலீசார் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் கொடுத்து வந்த நிலையில், இதுவரை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் விசாரணைக்காக ஆஜராகவில்லை. லுக் அவுட் நோட்டீசும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்...! அடுத்தடுத்து அதிரடி..! அரசியல் அரங்கில் பரபரப்பு..!!
ஆட்சிக் கவிழ்ப்பு சதி புகார் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை ஆஜராகாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் இதுவரை ஆஜராகாமல் இருக்கிறார். இன்று காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு போலீஸ் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஆஜராகாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பி அசோக் குமாருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் ஆஜராகாமல் உள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!