உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் கொடைக்கானல் எம் எம் தெரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்த அதிகாரிகள். போலீசார் குவிப்பு அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு. தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பயன்படுத்தலாம் என்று நேற்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எம் எம் தெரு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மைக்கில் அதி தூதர் சிற்றாலயம் ஒன்று அமைந்திருந்தது இந்த சிற்றாலயத்தை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் மைக்கேல் அதிதூதர் சிற்றாலயத்தை எடுக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை கொடுத்தும் தேவாலயம் அகற்றப்படாததால் நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவில் நேற்று மதியம் 1.15 மணிக்குள் தேவாலயத்தை முழுமையாக அகற்ற வேண்டும் தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவில் போலீசார் பயன்படுத்திக் கொள்ளலாம் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தி கொள்ளலாம் என உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: “வீணா போனவரைப் பற்றி பேச சொல்லாதீங்க” - கூட்டத்தில் இருந்து வந்த குரலால் கடுகடுத்த டிடிவி தினகரன்...!
இந்நிலையில் இரவோடு இரவாக எம் எம் திரு பகுதியில் இருந்த மைக்கேல் அதிதூதர் சிற்றாலயத்தை அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில் சுமார் நள்ளிரவு 2 மணிக்கு சிற்றாலயத்தை முழுமையாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வத்தலகுண்டு உள்ளிட்டா பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் தேவாலயம் இடிக்கப்பட்ட இடத்திற்கு வருகை புரிந்து வருவதால் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: அண்ணே..!! விசில் சின்னத்துல தான் ஒரு குத்து..!! வீடியோ ரிலீஸ் செய்தவர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!