திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாரத்தில் நடந்த ஒரு நிர்வாக நடவடிக்கை தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜிலியம்பாறை வட்டாட்சியராக பணியாற்றி வந்த அய்யாசாமி, வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த உத்தரவு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில், அந்த விவரங்களை அதே நாள் மாலைக்குள் வட்டாட்சியரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை வெளியானதும் உள்ளூரில் பெரும் அதிர்ச்சியும் கோபமும் பரவியது.இந்த உத்தரவு எந்தவித காரணமும் குறிப்பிடாமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் உறுப்பினர்களை மட்டும் குறிவைத்து வெளியிடப்பட்டதாக கருதப்பட்டதால் இடதுசாரி கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இதை ஜனநாயக விரோத நடவடிக்கையாகக் கண்டனம் தெரிவித்தனர். ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களின் விவரங்களை இவ்வாறு சேகரிப்பது அவர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதற்கு சமம் என்றும், இது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பும், அவசரகாலத்தின்போதும் கூட இத்தகைய சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டதில்லை என்றும், தேசிய அளவிலான அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களை இவ்வாறு பட்டியலிடுவது ஆபத்தான முன்னுதாரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படிங்க: "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!
குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலகத்திற்கு வட்டாட்சியர் அய்யாசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!