திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற ஒரு மகத்தான திரைக்கவி கலைஞர் என்றும் நான்கு சதவீத அளவிலான வாக்கு வங்கியை கொண்ட ஒரு அரசியல் தலைவர் எனவும் நம்மோடு அவர் மனமுவந்து களத்தில் இருப்பது நம் கூட்டணிக்கு நலம் பயக்கும் என்றும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து களமாடி வருவதாகவும் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாக பரிணமித்து உள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த அளவீடுகளில் வாக்கு வாங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது என்றும் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தான் கூட்டணியில் இட பகிர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

தற்போது நடந்தேறிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல் கட்சியை தேர்தல் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதே வேலையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அறிவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தோழமைக் கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்வது கட்சிக்கு செய்யும் பேரு உதவி என்றும் அதே வேளையில் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமைக் கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகை போரின் சின்னங்களை போட்டியிடக் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது... அயராமல் உழைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!
மக்கள் நீதி மய்யம் கட்சி நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக கைகோர்த்து களமாட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணியின் மீதான மதிப்பை உயர்த்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!