விதிகளின்படி ஆண்டுக்கு ஒரு முறை திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக பொது குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டது. அண்ணா அறிவாலயத்தின் முகப்பு போல பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்கு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு? மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிகள்,எம்எல்ஏக்கள், பொதுக்குழு நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்…,பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் நிர்வாகிகள் ஆர்வத்துடன் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் சற்று நேரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம்! அரங்கில் குவியும் நிர்வாகிகள்...