47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றாலும் மதுரையில் பல ஆண்டுகள் கழித்து நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தின் முகப்பு போல பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்கு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடி கம்பம் நிறுவப்பட்டு வண்ண மலர்களுடன் செயற்கை நீரூற்றும் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 3400 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் அமைப்பு ரீதியாக செயல்படும் 23 அணியின் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்த பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு திமுக நிர்வாகிகள் வரத் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவால் நடுத்தெருவுக்கு வரப்போகும் செல்வப்பெருந்தகை... கடும் அப்செட்டில் காங்கிரஸ் தலைமை!