தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சி சின்னங்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். கே.கே. சத்திரம் பஜார் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இல்லை என்று தெரிவித்தார். மத்திய அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். 100 நாள் வேலையை டெல்லியில் இருந்த படி முடிவு செய்வார்களாம் என்றும் குறிப்பிட்டார்.

இங்கு இருப்பவர்களுக்கான வேலை வாய்ப்பை டெல்லியில் இருந்து முடிவு செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டார். 100 நாள் வேலை திட்டத்தையே ஒழிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டதாக அதிமுக பொய் கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சசிகலா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார் என்றும் ஆனால் இன்று சசிகலாவிற்கே கட்சியில் இடம் இல்லை என்ற நிலையை உருவாக்கி துரோகம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். குட்கா விற்பதற்கு துணை நின்றதாக எதிர் தரப்பு வேட்பாளர் ரமணா என்பவர் மீது வழக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!