அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய கோரி வழக்கு. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் பாஜக சுப்பிரமணிய சுவாமி மீது தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதம் எம்எல்ஏ எம்பி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கையும் மாற்றி மதுரை கிளை உத்தரவு.
எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பதாக ஒரு வீடியோ பதிவை முகநூலில் பகிர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய வழக்கு. தூத்துக்குடி சேர்ந்த நீதிபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவரது முகநூல் பக்கத்தில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பதாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் முகநூல் பதிவு சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை... 3 சிறுமிகளை சீரழித்த கொடூரம்... அதிரடி தீர்ப்பு..!!
அமைச்சரின் இந்த நடவடிக்கை பிஎன்எஸ் சட்டப்படி தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். எனவே என் புகாரின் பேரில் அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதி விக்டோரியா கௌரி மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜோசப் ராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி சொன்னதை தான் அமைச்சர் பகிர்ந்து உள்ளார். வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றால் சுப்பிரமணிய சுவாமி மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு எம்பி எம்எல்ஏ வழக்கு இங்கே விசாரணைக்கு உகந்தது இல்லை என எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி விக்டோரியா கௌரி எம்எல்ஏ எம்பி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கையும் மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!