தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில் தமிழக அரசின் நிலைப்பாடுகள், எதிர்கால திட்டங்கள், நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வின் போது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிறகு சட்டப்பேரவை முடிந்த பிறகு இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த நிகழ்வு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் உரைக்கு முன்னதாகவும் பின்னதாகவும் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேரவையில் கண்டனம் தெரிவித்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவது தான் மரபு என்று குறிப்பிட்டார். இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதற்கு ஆளுநர் நன்றி தெரிவிக்கிறார் என்றும் ஆளுங்கட்சிக்கு ஆளுநர் இணக்கமாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!
அதற்கு, சட்டப்பேரவையில் தேசிய கீதம் எத்தனை முறை பாடப்பட வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நான் தான் என்று தெரிவித்தார் சபாநாயகர் பிரபாகர். ஆளுநர் இணக்கமாக இருக்கிறார் எனக் கூறியதற்கு கடந்த கால பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளது என சபாநாயகர் பிரபாகர் நகைச்சுவையாக விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் தனி தீர்மானம்..! முழு ஆதரவு... கிரீன் சிக்னல் காட்டிய திமுக..!!