தொடர் விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லும் நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதி இல்லை என குற்றம் சாட்டப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா என்றும் சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்