திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலையை உடைப்பது ஏன் என்றும் இயற்கை வளங்களைக் காப்பாற்றப் போகிறோமா எனவும் எல்நினோவால் அழியப் போகிறோமா என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். மலைகளை உடைப்பது வெறும் பாறைகளை அகற்றுவதல்ல.நம் எதிர்காலத்தை சிதைப்பது., இன்று நாம் சுவாசிக்கும் காற்று, பருகும் தண்ணீர், உண்ணும் உணவு, இவை எதுவுமே மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. இயற்கை நமக்கு அளித்த உயிரின் அடித்தளம் என்று கூறினார். ஆனால் அந்த அடித்தளத்தையே நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வெப்பநிலை உயர்வு, பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள், அதீத மழைப்பொழிவு, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சவால்கள் அதிகரித்து வருகின்றன. இதன் தாக்கம் மனிதர்களின் உடல்நலம், உணவுப் பாதுகாப்பு, குடிநீர் என வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழலில், மீதமிருக்கும் இயற்கையை பாதுகாக்கப் போகிறோமா?அல்லது அதையும் அழித்துவிட்டு எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளப் போகிறோமா? என்று கேட்டுள்ள வேல்முருகன், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!
பொக்லைன் பயன்படுத்துவதற்கும் பாறைகளை உடைப்பதற்கும் உரிய அனுமதி உள்ளதா? எந்தத் துறையின் அனுமதியின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன? சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா? விதிமீறல் நடைபெற்றிருந்தால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு வெளிப்படையான பதிலை மக்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!