தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியான பிறகு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவின் எதிர்காலம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இங்கு விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கே.பி. முனுசாமி, எஸ். பி. வேலுமணி ஆகியோர் ஆலோசனை நடத்திய பிறகு புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வையகப்பட்டு இருக்கும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி கிங் மேக்கர் அல்ல..! " கிங்"..! அதிமுக Ex. அமைச்சர் செம்மலை பெருமிதம்..!
சட்டப்பேரவை தேர்தலில் வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடே காத்திருந்த முடிவு... வதந்திகளுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி... தெள்ளத்தெளிவாக அறிவித்தது அதிமுக தலைமை...!