டாஸ்மாக் ரெய்டில் பயம் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவினரை பழிவாங்கி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக சாடியுள்ளார். அதில், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரருமான சேவூர் S.ராமச்சந்திரன், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ஆகியோரை குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது , பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மே 29,30 ஆம் தேதிகளில் கூடுகிறது அதிமுக மா. செ.கூட்டம்...தவறாமல் பங்கேற்க இபிஎஸ் அழைப்பு

டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம், வெல்வோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!