நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார் என்பது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகள் அவரது பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுகவுக்கு பலம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு தொழில் நகரமான திருச்செங்கோடு சுற்றுப் பகுதிகளில் நெசவு, சிறு தொழில்கள் மற்றும் விவசாயம் ஆகியவை மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளன. இந்தப் பகுதியில் அதிமுகவின் அடித்தளம் வலுவாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆட்சியின் கொள்கைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையை வடிவமைத்து வருகிறார்.

இன்றைய நிகழ்வில் அவர் திருச்செங்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களை நேரடியாகச் சந்தித்து, அதிமுகவின் வாக்குறுதிகளை எடுத்துரைக்க உள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பரப்பரை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!
திருச்செங்கோடு பகுதியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிமுகவே சரியான தேர்வு என்று வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பரப்புரை மூலம் அவர் தொகுதி மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், 2026 தேர்தலுக்கான அதிமுகவின் வெற்றி வாய்ப்பை வலுப்படுத்தவும் முயற்சி செய்வார் என கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: எம்.பி. உயர்வு வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டது..! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!