தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்தும் நோக்கில், “உலகம் உங்கள் கையில்” என்ற மாபெரும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இத்திட்டத்தின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டு முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அதை கல்லூரி மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் வகையில் 2025-2026 பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு அதிநவீன மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட உள்ளன. நான்கரை ஆண்டுகளாக மடிக்கணினி கொடுக்காமல் இளைஞர்களை திமுக அரசு வஞ்சித்து வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் வருகிறது என்றதும் இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுவதாக குற்றம் சாட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தோடு போட்டியிடும் வகையில் திட்டங்களை வகுப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து பொறாமையில் குமைகிறார் இபிஎஸ் என்று குற்றம் சாட்டினார். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்ற எம்ஜிஆர் பாடல் இபிஸ்க்கு பொருந்தும் என்றும் அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 தேர்தலில் ஓட்டையானதை மறந்தாரா இபிஎஸ் எனவும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: அவங்க கிள்ளுக்கீரையா?.. இளைஞர்கள் வாக்கை பெற மடிக்கணினி... திமுகவை தோலுரித்த EPS...!
மாணவர்களுக்காக வாங்கிய லேப்டாப்பை வீணடித்த இபிஎஸ், லேப்டாப் வழங்குவதைப் பற்றி பேசலாமா என்று சாடிய அமைச்சர் சிவசங்கர், கூட்டணி ஆட்சி என பேசி இருக்கும் அமித்ஷா இபிஎஸ் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என தெரிவித்தார். இந்த அவமானம் உனக்கு தேவையா என்ற காமெடிக்கு பொருத்தமானவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: PATCH WORK திமுக… அரசு ஊழியர்களுக்கு விபூதி…! பூந்து விளாசிய அதிமுக…!