ராமநாத சுவாமி கோவில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோவில். இந்தக் கோவில் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், நான்கு புனித சாரதாம் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை சீதை மணலால் உருவாக்கியதாகவும், பின்னர் இராமர் அதை பிரதிஷ்டை செய்ததாகவும் நம்பப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலில் உள்ளூர் வாசிகள் சென்றுவர பாரம்பரிய வழி ஒன்றை பயன்படுத்தி வந்ததாகவும், அதனை தமிழக அரசு மூடி விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது. உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. புதுப்புது விளம்பரம் போதுமா.. கல்வித்துறை நாசமா போச்சு..! நயினார் பளிச்..!

மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள் என்று கூறினார்.

ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் ரத்தத்தை குடிக்கும் திமுக ஆட்சி.. கொங்கு மண்டலமே சாட்சி! போட்டு விளாசிய சீமான்..!