தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விவசாயி ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். நல்லம்பள்ளியை அடுத்த கீழ்ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

செல்வராஜ் என்பவர் நில பத்திரம் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக கூறி மனு கொடுக்கச் சென்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் உடலில் மன்னனையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தனது புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீ வைத்துக் கொண்ட விவசாயி ஜெயராமன் 60 % தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு 'spy' வேலை.. பஞ்சாபில் மேலும் ஒரு யூடியூபர் கைது..!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்கணும்.. செல்வப்பெருந்தகை சாடல்..!