தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையுடைய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறை உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி மருத்துவ தகுதி சான்றுகளை பெற வேண்டும்.

உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும். உணவு பொருட்களில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மெய்யாத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும். உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும். மேலும் உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் உள்ளிட்டவற்றை அணிய வேண்டும் எனவும் சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளை செயற்கை நிறங்கள் சேர்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவகங்கள்ல உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்சுமட் பேப்பர் அலுமினியம் ஃபாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அதேபோல நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவு பொருட்களில் நேரடியாக வைத்து பரிமாறுவோ பொட்டலம் கட்டவோ கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உணவு வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவு கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் என்பது ரத்து செய்யப்படும் எனவும் அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழுக்கு உண்டு.. கமலுக்கு இல்லை.. உடைத்துப் பேசிய நயினார் நாகேந்திரன்..!
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!