திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜிவ் காந்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோ திறந்துவைத்தனர்.

அந்நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால் கிடைத்தது. இந்த பதவிகள் வரும் போகும் ஆனால் படித்து வாங்கிய பட்டங்கள் மறையும் வரை இருக்கும். எனவே மாணவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,
தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாததுதான் என கூறியுள்ளார்கள். இதனால் பெரியளவு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்கள். இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தேவை ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..!
இதையும் படிங்க: வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!