தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நல்லம்பள்ளியை அடுத்த கீழ்ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன் என்பவர் மனு கொடுக்க சென்றுள்ளார்.

செல்வராஜ் என்பவர் நில பத்திரம் மூலம் பணம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக கூறி மனு கொடுக்கச் சென்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் உடலில் மன்னனையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தனது புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீ வைத்துக் கொண்ட விவசாயி ஜெயராமன் 60 % தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படிங்க: மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..!

இந்த நிலையில் விவசாயி ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசார் அமைத்த தடுப்புகளை தாண்டி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாத சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்காவை அழிக்க BIO WAR-ஐ கையிலெடுக்கும் சீனா? விவசாயத்தை அழித்து ஆண்களை மலடாக்க திட்டம்?