பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அரசு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணையும் நிகழ்ச்சி தான் மக்கள் குறைத்தீர் கூட்டம். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் மக்கள் குறை தீர்க்க கூட்டம் நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய பேனர் அகற்றப்பட்டுள்ளது. பிரதமரின் புகைப்படம் உள்ள பேனரை அகற்றியதை ஏற்க முடியாது என்றும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஏவுகணை வீசித்தான் அடிக்க முடியல..? செருப்பாலாவது அடிப்போம்... பாக்., பிரதமர் படத்தை பதம் பார்த்த பாஜகவினர்..!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் உள்ளே நுழையும் முற்பட்டுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு செக் வைத்த இபிஎஸ்... இன்பதுரையை களமிறக்க இதுதான் காரணமா?