மேட்டூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான ஜிகே மணி பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையிலான உறவு அரசியல், அமைப்பு மற்றும் தலைமைத்துவத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜி.கே. மணி 2019 வரை பாமகவின் மாநிலத் தலைவராக இருந்தார். பின்னர், கட்சியின் தலைமைப் பொறுப்பு அன்புமணி ராமதாஸுக்கு மாற்றப்பட்டபோது, ஜி.கே. மணி கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!
இந்தப் பதவி, அவரது அனுபவத்தையும், கட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. ஜி.கே. மணி, பாமகவின் முக்கிய முடிவுகளில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும் பங்காற்றுகிறார்.

குறிப்பாக தற்பொழுது ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் கூட ஜிகே மணி சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கட்சிப் பணிகள் முதல் உட்கட்சி பூசல் வரை பல்வேறு விவகாரங்களில் ஜிகே மணியின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் அன்புமணி அணி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஜிகே மணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஜி.கே மணியை நலம் விசாரித்தார். அவருக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை தொடர்பாகவும் கேட்டுக்கொண்ட சீமான், விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்தினார்.
இதையும் படிங்க: கள் விஷம்; உணவல்ல... சீமானை கைது பண்ணுங்க... கிருஷ்ணசாமி அதிரடி!!