அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் இன்று 11 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த வழக்கில் இன்னொரு நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக நிறைய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தில் நான் தெளிவுபடுத்த விரும்புவது, முதல்ல எங்களை பொறுத்தவரைக்கும் அந்த அக்யூஸ்டுடைய போன் தான் வெப்பன் ஆப் த கேஸ். அந்த போனை தடவியல் ஆய்வுக்கு அனுப்பினோம்.நீதிமன்றம் மூலமாக பாரன்சிக்கு அனுப்பப்பட்டு அந்த போன்ல என்னென்ன விஷயங்கள் இருந்தன அவருடைய சோசியல் ஆக்டிவிட்டீஸ் என்னென்ன?, எந்தெந்த சோசியல் மீடியாவில் எல்லாம் இருக்கிறாரு?, வேற என்னென்னல்லாம் அதுல இருக்கு அப்படின்னு சொல்லி எல்லாத்தையுமே தடவியல் துறைக்கு அனுப்பி ஆராய்ந்தோம்.

குறிப்பாக சம்பவம் நடந்த 23ஆம் தேதி அந்த போனுடைய நடவடிக்கை என்ன அப்படின்னு பாரன்சிக் லேப் அனலைஸ் பண்ணி, அந்த போன் பிளைட் மோட் அதாவது ஏரோபிளேன் மோடில் போடப்பட்டது அப்படிங்கறத எப்எஸ்எல் பாரன்சிக் சயின்ஸ் லேபரட்டரி ரிப்போர்ட்டாக ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த சம்பவ நேரத்துல சம்பவ நாள் அன்று அந்த போன் ஏரோபிளேன் மோடில போடப்பட்டிருந்தது என்பதை ஆவணபூர்வமாகவும் அந்த நிபுணர் வந்து வாய்மொழி சாட்சியாகவும் நீதிமன்றத்துல சொல்லிட்டு போயிருக்காங்க.

இதில் இரண்டாவது பாயிண்ட் பார்த்தீங்கன்னா, சம்பவம் நடந்த 23 ஆம் தேதி 6:29க்கு தான் முதல் கால் அவருக்கு வந்திருக்கு, அதன் பிறகு 8.52 வரைக்கு அவருக்கு எந்த அழைப்பும் இல்லை. 8:52 க்கு எஸ்எம்எஸ் அலர்ட் அவருக்கு கிடைக்குது. என்னன்னா மிஸ் கால் அலர்ட் கிடைக்குது. அப்போது அவர் போனை ஏரோ ப்ளான் மோடில் தான் போட்டிருக்காருன்னு உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணே வந்து ரிங்டோன் ஏதாவது வந்துதான்னு கேட்டப்போ?, இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க. அதாவது அவளை ஏமாத்துறதுக்காக தானும் ஒரு யுனிவர்சிட்டி ஸ்டாப்னு ஏமாத்துறதுக்காக போட்ட நாடகம் தான் அதுங்கறது ஆவண பூர்வமாக மட்டும் இல்ல, அறிவியல் பூர்வமாகவும் நிரூபிச்சாச்சு எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே! சட்டக்கல்லூரி மாணவிக்கு வக்காலத்து வாங்கும் பவன், கங்கனா..!