ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக நடித்து வருகிறது. நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டு அக்டோபர் 16ஆம் தேதி, அதாவது 4 நாட்கள் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த மழை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதனால் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீரை கர்நாடகா அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்துவிட்டுள்ளது. மற்றொருபுறம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையும் படிங்க: ப்ளீஸ் எக்காரணம் கொண்டும் இந்த பக்கம் வராதீங்க... ஒகேனக்கல் கரையோர மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை...!
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று தமிழகத்திற்கு உபரி நீரானது 18,900 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக காவேரி கரையோரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் அதிகரிக்க தொடங்கியது.
படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு நிலவரப்படி 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆறு மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக 32 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
இந்த நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில் நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.
இதையும் படிங்க: “திறக்கப்போறோம்... 2 மணிக்கு அலர்ட்டா இருங்க..” 18 கிராமங்களுக்கு பறந்த எச்சரிக்கை...!