கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து Scoot விமானம் கோவைக்கு வந்தது. விமானத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது விமானத்தில் கோடி கணக்கான மதிப்பில் உடைய உயர்ரக போதை பொருட்கள் பயணிகள் மூலம் கடத்தி வரப்படுவதாக கோவை வான் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு, கோவை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் வான் சுங்க இலாகா துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டனர்.
அப்போது அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பயணிகள் ஒவ்வொருவராக பரிசோதனை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களின் உடமைகள் கொண்டு வந்த பைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது 2 பயணிகள் கொண்டு வந்த பைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் 6.713 கிலோ கிராம் எடை உள்ள உயர்ரக கஞ்சா போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதை கடத்தி வந்த கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகையில் உபயதுல்லா ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்த ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களை ஓட ஓட வெட்ட துரத்தும் போதை ஆசாமிகள்... அண்ணாமலை அதிருப்தி..!
அதன் பிறகு கைதான கேரளா பயணிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடத்தில் அதே விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா என்ற 2 பயணிகள் 18.67 லட்சம் மதிப்புடைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுங்க இலாக்காவிற்கு வரி செலுத்தாமல் அவற்றை ரகசியமாக கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: பாக்., தலைவணங்காது!! இந்தியா மீது போர் தொடுப்போம்!! பிலாவல் பூட்டோ மிரட்டல்!!