பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிலே கொரோனா ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தகவலின் படி இந்தியாவில் தற்போது 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இதில் இதுவரை ஏழு பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 10 நாட்களில் அதாவது மகாராஷ்டிராவில் நான்கு பேர், கேரளாவில் இரண்டு பேர் மற்றும் கர்நாடகத்தில் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் உயிரழுந்த ஏழு பேரில், ஐந்து பேருக்கு மற்ற இணை நோய்கள் இருந்திருக்கின்றன. அதாவது இணைநோய் உடன் கொரோனா தொற்றும் இணைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அந்த அதிகாரப்பூர்வ வலைதளத்திலே ஏழு பேர் இதுவரை பலியாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தற்போது பரவும் கொரோனா வகையால் பாதிப்பு பெரிதாக இல்லை. அச்சப்பட தேவையில்லை எனக்கூறப்பட்டுள்ளது. இணைநோய் இருப்பவர்கள் மற்றும் வயதானவர்கள் மட்டும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது n8.1.8.1 என்ற ஒரு வகை மற்றும் எல் எf.7 பாயிண்ட் என இரண்டு புதுவகை கொரோனா திரிபுகள் இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகள் அனைத்துமே பரவி வருகின்றன. இந்த இரண்டு திரிபுகளும் ஜே1 வகை ஒமிக்ரான் வகையைச் சார்ந்தவை.

இதையும் படிங்க: அய்யய்யோ.. மீண்டும் மீண்டுமா! டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா.. எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?
ஒமிக்ரான் என்றால் எளிதாக எல்லாருக்கும் புரியும். டெல்டா என்று எளிதாக டெல்டாதான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. பிறகு காமா வந்தது அதற்கு பிறகு தற்போது ஒமிக்ரான் என்ற வகை பரவியது. அந்த ஒமிக்ரானிலிருந்து இரண்டு திரிபுகளாக கொரோனா திரிந்து தற்போது இரண்டு வகை கொரோனாக்களாக பரவி வருகின்றன. இதன் பாதிப்புதான் சிங்கப்பூர், மலேசியா அதேபோன்று தாய்லாந்து, வியட்னாம், சீனா நாடுகளைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் முகக்கவசம் கட்டாயமா?... வெளியானது முக்கிய தகவல் ...!