பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் கடந்த 2024 - 25 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எதிர்பார்த்த கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அவ அமைப்பினர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பார்த்து அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றன. இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் முறை.. ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள்..
அதில், அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் ஒரு மனது முடிவாக பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது மட்டும் இன்றி கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில், மே மாதம் 24 ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக முதலமைச்சர். மு க ஸ்டாலின் நடப்பு பட்ஜெட் கூட்டு தொடரிலேயே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பார்த்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏப்ரலில் முற்றுகை போராட்டம்.. மின் ஊழியர் அமைப்பினர் அறிவிப்பு..