தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் தக் லைப் ப்ரோமோஷன் விழாவில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை படம் கர்நாடகத்தில் வெளியாகாது என அம்மாநில அமைப்புகள் தெரிவித்தன. இது தொடர்பான வழக்கில் நீதிபதி சரமாரி கேள்விகளை கமல்ஹாசனுக்கு முன்வைத்தார். இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்து விடப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். அண்ணன் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கூடாது எனவும் அவர் அன்பு கட்டளை விடுத்துள்ளார்.

கமல் என்ன மொழியியல் வல்லுனரா என நீதிபதி கேட்கிறாரே...நீதிபதியை பார்த்து நான் கேட்கிறேன் நீங்கள் என்ன வரலாற்று வல்லுனரா? தமிழ் இருந்து தான் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகள் பிறந்ததாக கூறினார். திராவிட மொழிகள் தமிழிலிருந்து தான் வந்தது என கூறியவர்கள் எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பிய சீமான், கமல்ஹாசன் கூறியது வரலாறு., அதை வைத்துக்கொண்டு படத்தை திரையிட அனுமதிக்க மாட்டேன் என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்றும் தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என தெரிந்து கொண்டே கன்னட மக்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர் எனவும் கன்னடம் குறித்து கமல்ஹாசன் தவறாக எதுவும் கூறவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இளையராஜாவை இறைவன் என்று புகழ்ந்த சீமான்... இசை போதிமரம் என புகழாரம்!

KGF1,KGF2, காந்தாரா படங்களை பார்த்து வெற்றியடைய செய்த தமிழர்களை அவமதிக்கும் செயல் என்றும் இந்த படங்களுக்கு நாங்கள் ஏதாவது இடையூறு செய்தோமா எனவும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 500 கிமீ தூரத்துக்கு TRANSFER! சிறை தண்டனையை விட கொடுமை... காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்!