திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
அவசரநிலை காலத்தில் காமராஜரை கைது செய்ய மத்திய அரசு முயன்றபோது, திருப்பதி செல்வதற்காக காமராஜர் திட்டமிட்டிருந்தார். திருப்பதி சென்றால், காமராஜரை கைது நடவடிக்கையில் இருந்து தன்னால் காப்பாற்ற முடியாது என்று கூறியதாக கருணாநிதி கூறியதாக பேசினார். மேலும், காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார்.

திருச்சி சிவாவின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானதாக இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். காமராஜர் குறித்து பேசிய பேச்சுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும் என்றும், உண்மைக்கு புறம்பாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. திருச்சி சிவாவுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், திருச்சி சிவா வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.
இதையும் படிங்க: காமராஜர் சர்ச்சை சரியல்ல.. கலகமூட்டிகளுக்கு இடம் கொடுக்காதீங்க..! முதல்வர் அறிவுரை..!
காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து முற்றுகையிட சென்றனர். திருச்சி நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள வ.உ.சி சிலை முன்பு திரண்டு காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கொச்சையா பேசாதீங்க...காமராஜர் ஏசி போட்டு தூங்கினாரா? கொந்தளித்த தமிழிசை