பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீதான நிலைப்பாடு என்ன என்பதை உலக நாடுகளுக்கு வெளி காட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டது. பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்தது. பாஜக உறுப்பினர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சி எம்.பி. களையும் சேர்த்து இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. கனிமொழி, சசிதரூர், சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏழு பேர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா, கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து கூறியது. இந்த நிகழ்வு தொடர்பாக தனது மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி உள்ளார். ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தியதாக கூறினார்.
இதையும் படிங்க: முழு வீச்சில் பரந்தூர் விமான நிலைய பணிகள்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை ஒற்றுமை மொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்வதாக அவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி.. சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!