தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை விசாரிக்க கூட தமிழக வெற்றிக்கழக அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார். விமர்சனம் வைக்கும் youtube உள்ளிட்டோரை சிறைக்கு அனுப்ப தமிழக வெற்றிக்கழக அரசு முயல்வதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய TVK நிர்வாகி... தர்ம அடி வாங்கிய சம்பவம்..! கனிமொழி MP கண்டனம்..!!
ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்தோர் விமர்சித்தபோது திமுகவினர் இப்படி நடந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத தமிழக வெற்றிக்கழகம் பாஜகவின் பெயரை கூட சொல்லாமல் தயக்கத்துடன் ஆட்சி நடத்துகிறது என்ற விமர்சித்தார். டெல்லியில் மாணவர்களை கையாளும் பாஜகவை போல் தான் இங்கே தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் கையாள்கிறது எனவும் விமர்சித்துள்ளார். தாங்கள் சிறைக்கு செல்ல அஞ்ச மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது..!! தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி..!!