இந்திய ரயில்வே பாதையானது பயணிகளின் வசதிக்காக மட்டுமல்லாமல், சில சமயங்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விருப்பமான வழியாகவும் மாறிவருகிறது. குறிப்பாக சமீப காலமாக ரயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) மற்றும் அரசு ரயில்வே போலீசார் தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் பல கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில், குறிப்பாக மதுரை, திருச்சி, சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு கஞ்சா கொண்டு செல்லப்படுவது பொதுவான முறையாக உள்ளது.

சில சமயங்களில் பயணிகள் பயன்படுத்தும் பைகள், டிராலிகள் மூலம் மறைத்து கொண்டு செல்லப்படும் கஞ்சா, பல கிலோ அளவில் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் ரயிலின் ஏசி கோச்சில் 40 கிலோ கஞ்சா கடத்திய வடமாநிலத்தவர் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து நாற்பது கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குரல்களை ஒடுக்க முடியாது! தெருக்குறள் அறிவுக்கு ஆதரவாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்!
ஏசி கோச்சில் சோதனை நடத்த மாட்டார்கள் என்று நினைத்து கஞ்சாவுடன் வட மாநிலத்தவர் நான்கு பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. திடீரென ரயில்வே போலீஸ் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். கஞ்சா கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாகவும் மூளையாக செயல்படுபவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: பாடகர் அறிவு அதிரடி ARREST..! நீட் எதிர்ப்பு போராட்டம்... வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்..!!