தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை ஒன்றை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கரூருக்கு தனது முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இது கடந்த ஆண்டு ஏற்பட்ட சோக சம்பவத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக உரையாடும் உணர்ச்சிபூர்வமான தருணமாகவும் அமைந்தது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தேவக் நடத்திய பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தப் பின்னணியில் இன்றைய கரூர் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. முதல்வராக முதல் முறையாக அவர் கரூருக்குச் செல்கிறார் என்பதால், அவரை வரவேற்க ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். கரூர் நகரமே பாதுகாப்பு ஏற்பாடுகளால் பரபரப்பாகக் காட்சியளித்தது. அப்போது அங்கிருந்த பெண்கள் விஜய் ஆட்சி குறித்து எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏ.விடம் பேர விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மேலும் இருவர் கைது... ரூ.54 லட்சம் பறிமுதல்...!
இது பெரிய வரலாறு என்று தெரிவித்தனர். அன்று கரூருக்கு பெரிதாக பாதுகாப்பே இல்லை என்றும் ஆனால் இன்று பலத்த பாதுகாப்போடு தாங்கள் வருகை தந்திருப்பதாக கூறினார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் போட்டால் கூட உடனே அதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று தெரிவித்தனர். அரசு அலுவலகங்களுக்கு சென்றால் மக்களை நன்றாக மதிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர். முதலமைச்சர் விஜய் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று தெரிவித்துள்ள அவர்கள் இது தொடர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!