கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் என்ற தமிழரசனை போலீசார் காலில் சுட்டு பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் சின்னாண்டான் கோவிலைச் சேர்ந்த பென்சில் என்ற தமிழரசன் தனது கூட்டாளிகளான பிரகாஷ், மனோஜ் ஆகியோர் குடிபோதையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே மலையாளம் என்பவருடன் சண்டையிட்டு அவரை கட்டையால் தாக்கி உள்ளனர். இந்த தகவலை அறிந்த கரூர் நகரப் போலீசார் பிரகாஷ் ஹரிகரன் மனோஜ் ஆகிய மூவரைகைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியான பென்சில் என்ற தமிழரசன் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை கார் குண்டு வழக்கில் திடீர் திருப்பம்... அரபு கல்லூரியில் நடந்த சதித்திட்டம் அம்பலம் - என்.ஐ.ஏ.வால் 4 பேர் கைது!

இந்த நிலையில் நேற்று இரவு கரூர் அரிக்காரம் பாளையம் சாலையில் உள்ள மேம்பால அருகில் பென்சில் என்ற தமிழரசன் அங்கு மறைந்திருப்பது தகவல் கிடைத்துள்ளது இதை அடுத்து கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தமிழரசன் எப்படி சென்றபோது தப்பி ஓடி உள்ளார் இதை எடுத்து அவரது தமிழரசனின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர் இதை அடுத்து தமிழரசன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: “ஒருத்திக்கு ஆயிரம் என்பது இந்த காலம்” - மகளிர் குறித்து மட்டமான கமெண்ட்... ரூ.1000 உதவித்தொகையை நக்கலடித்தாரா நாஞ்சில் சம்பத்?